நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும் : விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை!!

500

act

எனக்கு திறமை இருக்கிறது, யாரும் என்னை பார்த்து அனுதாபம் படத் தேவையில்லை என்று விபச்சார வழக்கில் சிக்கி விடுதலையான நடிகை ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார்.

நடிகை ஸ்வேதா பாசு கடந்த 2014ம் ஆண்டு ஹைதராபாத்தில் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட அவர் பின்னர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், மக்கள் ஏன் என்னை பார்த்து அனுதாபப்படுகிறார்கள் என்று தான் எனக்கு புரியவில்லை.

எனக்கு யாருடையை அனுதாபமும் தேவையில்லை. எனக்கு இப்போது வேலை தான் வேண்டும். எனக்கு வாய்ப்பு அளிப்பதாக அறிவித்த ஹன்சல் மேத்தா ஒன்றும் செய்யவில்லை.

எனக்கு திறமை இருக்கிறது, என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும் எனக் கூறியுள்ளார்.