சீனாவின் முதல் விண்வெளி நிலையம் என்ற பெருமையைப் பெற்ற டியான்காங் – 1 ( Tiangong-1) என்ற விண்வெளி நிலையம் கட்டுப்பாட்டை இழந்துள்ளதால் 2017 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் அது பூமியில் வந்து விழக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த விண்வெளி நிலையம் விண்ணில் ஏவப்பட்டது.
டியான்காங் – 1 விண்வெளி நிலையத்தை அடிப்படையாக வைத்து 2020 இல் மிகப்பெரிய விண்வெளி நிலையத்தைக் கட்டமைக்க சீனா திட்டமிட்டிருந்தது.
ஆனால், டியான்காங் – 1 தற்போது கட்டுப்பாட்டை இழந்து விட்டதால் பூமியில் வந்து விழவுள்ளது.
பூமியில் வீழும்போது அது துகள்களாகவே விழக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமிக்கு ஒரு விண்கலம் பத்திரமாகத் திரும்புவது என்பது இன்னும் சாத்தியமாகவில்லை. அது மிகப் பெரிய கடினமான ஒன்றாகும்.
காரணம், பூமியிலிருந்து விண்வெளிக்கு ஏவுவதை விட பூமிக்கு விண்கலத்தைத் திரும்பக் கொண்டு வருவது மிகக் கடினமானது.







