தாயின் காதலனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமி மற்றொருவராலும் பாலியல் வல்லுறவு!!

532

rape

தாயின் காத­லனால் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு நீதி­மன்­றத்­தினால் கவ­ன­மாகப் பாது­காத்துக் கொள்­ளு­மாறு தாயிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்த 16 வயது சிறு­மியை மீண்டும் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் இரண்டு பிள்­ளை­களின் தந்தை ஒரு­வரை கைது செய்­வ­தற்­காக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருப்­ப­தாக முந்தல் பொலிஸார் தெரி­வித்­தனர்.

பாதிக்­கப்­பட்ட சிறு­மியின் தந்தை தனது மனை­வி­யை­யும், மக­ளையும் கைவிட்­டு­விட்டுச் சென்­றுள்­ள­தோடு, சிறு­மியின் தாய் அதன்பின்னர் வேறொ­ரு­வ­ருடன் தொடர்பு வைத்­துள்ளார்.

அந்­ ந­பரால் குறித்த சிறுமி துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார் என்ற முறைப்­பாட்­டை­ய­டுத்து அவர் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­தா­கவும் அதன் பின்னர் குறித்த சிறு­மியை கவ­ன­மாகப் பாது­காக்­கு­மாறு ஆலோ­சனை வழங்­கப்­பட்டு அவ­ரது தாயிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் ஆரம்ப கட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

தானும் மகளும் வேறு பிர­தே­சத்தில் வசிப்­ப­தற்குச் சென்­ற­தா­கவும் கடந்த இரண்டு மாதங்­க­ளாக அயல் வீட்­டுக்­காரர் ஒருவர் மகளை ஏமாற்றி பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் சிறு­மியின் தாய் முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த சிறுமி வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.