யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் சிறுமியொருவரை மிக கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில் பெருமளவான முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரியொருவர் ஊடகம் ஒன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று முதல் இவ்வாறு பெரும்பாலானோர் முறைபாடுகளை பதிவு செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமது அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்ட அவசர அழைப்பு தொலைபேசி இலக்கமான 1929 என்ற இலக்கத்திற்கே இந்த முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், ஒரு சம்பவம் தொடர்பில் முதலில் கிடைக்கின்ற முறைபாட்டிற்கு அமையவே விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதனால் ஏனைய முறைபாடுகளை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.