தமிழ் மக்களின் உரிமைக்குரலை மீண்டும் ஒரு தடவை உலகிற்கும் அரசாங்கத்திற்கும் வெளிப்படுத்தும் முகமாக தமிழ் மக்கள் பேரவையால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் பேரணியில் வவுனியா மாவட்ட மக்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டுள்ளனர்.
இன்று (24.09.2016) காலை 6 மணிக்கு சிந்தாமணிபிள்ளையார் கோவில் முன்பாக ஒன்று திரண்ட தமிழ் ஆர்வலர்களும் இளைஞர்களும் பேருந்துகளில் தொடரணியாக யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தனர்.
எழுக தமிழ் பேரணியை முன்னிட்டு வவுனியா நகரில் சிலர் தமது வர்த்தக நிலையங்களை மூடி ஆதரவளிப்பதாக எமது தெய்தியாளர் தெரிவிக்கின்றார்.













