13 வயதான சிறுமி ஒருவரை பணம் கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 12 வயதான சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். குளியாப்பிட்டி பிரதேசத்தில் இந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
13 வயதான சிறுமியை காட்டுப் பகுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்று பணம் கொடுத்து வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
குளியாப்பிட்டி மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸார் சிறுவனை கைது செய்துள்ளனர். கெக்குலாகொட வௌகம பிரதேசத்தைச் சேர்ந்த 12 வயதான சிறுவனே கைது செய்யப்பட்டுள்ளான்.
சிறுவனின் தந்தை கைவிட்டுச் சென்றுள்ளதாகவும், தாய் வெளிநாட்டில் பணியாற்றுவதாகவும் சிறுவன் அதிகளவு ஆபாசபடங்களை பார்க்கும் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.






