எகிப்தின் கடற்பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது.
எகிப்தில் இருந்து இத்தாலி நோக்கி கடந்த புதன்கிழமை சுமார் 550 அகதிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த படகு கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 163 பேர் நீந்தி உயிர் தப்பினர். தகவலறிந்த கடற்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
படகில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சூடான் மற்றும் சோமாலியாவைச் சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.






