வவுனியா ஹொரவப்பொத்தானை பிரதான வீதியில் 35 ஆம் கட்டை பகுதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
பருத்தித்துறையிலிருந்து திருகோணமலை பயணித்த பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதிக வேகமே விபத்திற்கு காரணம் என பொலிஸார் கூறினர்.