நாட்டில் உள்ள சிகரட் பிரியர்களுக்கு சுகாதார அமைச்சு ஓர் கசப்பான செய்தியை வெளியிட்டுள்ளது.
இதன்படி எதிர்காலத்தில் சிகரட்டுக்களின் விலை 11 ரூபாவினால் அதிகரிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் 15 சதவீதம் வற் வரி சேர்க்கப்பட்டுள்ளதால் சிகரட் ஒன்றிற்கான விலை ஐந்து ரூபா அதிகரிக்கப்பட்டது. 35 ரூபாவாக உள்ள சிகரட் 40 ரூபாய்க்கு தற்போது விற்பனை செய்யப்படுகின்றது.
ஆனால் சிகரட்டின் விலை மேலும் 11 ரூபாவாக அதிகரிக்க கூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் புகையிலை தீர்வையை அதிகரிக்க அடுத்த வாரம் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.






