சுத்தமான குடிநீர் இல்லாதவர்கள் 117 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அதனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அவசர தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் செயற்பாட்டில் இருக்கும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.
நாட்டில் தற்பொழுது நிலவும் வரட்சியான காலநிலையினால் அம்பாறை, பொலன்னறுவை, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பிரதேசத்திலுள்ள மக்களுக்கு குடிநீரை எடுத்துச் சென்று விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.






