இந்த நிலை வேறு எவருக்கும் வர வேண்டாம் : விபத்தில் குடும்பத்தை இழந்த பெண்ணின் கதறல்!!

568

accident-family-dead

அமெரிக்காவில் மதுபோதையில் வந்த வாகன ஓட்டியால் நேர்ந்த விபத்தில் கணவன் மற்றும் குழந்தையை பறிகொடுத்த இளம் பெண் வேறு எவருக்கும் இந்த நிலை வேண்டாம் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் குடியிருந்து வரும் 24 வயதான நிக்கி குரேரோ தமது கணவருடன் சென்றபோது சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவரது கணவன் பாபியன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து நடந்த 2 நாட்கள் கடந்த நிலையில் கர்ப்பமாகி 19 வாரம் மட்டுமேயான குழந்தையை இழந்துள்ளார்.

இந்த நிலையில் சமூகவலைப்பக்கத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்ட அவர், மது போதையில் வாகனம் செலுத்துபவர்களே, அடுத்தவர் வாழ்க்கையை சீர்குலைப்பது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 2 ஆம் திகதி தமது கணவர் பாபியனுடன் சான் மார்க்கோஸ் நெடுஞ்சாலை வழியே தங்கள் வாகனத்தில் சென்றுள்ளனர்.

அப்போது 21 வயதான பல்கலை மாணவியின் வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இந்த தம்பதியின் வாகனம் மீது மோதியுள்ளது. இதில் பாபியன் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சமூகவலைத்தளத்தில் இறந்த தமது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட அவர், உங்கள் சுதந்திரத்தில் சிக்கலை ஏற்படுத்தாதீர்கள் என தெரிவித்துள்ளார்.

அதிக மதுபோதை என்றால் உங்கள் நண்பர்களை வாகனத்தை செலுத்த அனுமதியுங்கள். மட்டுமல்ல வேறு எவரையாவது உதவிக்கு அழையுங்கள், உங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல அடுத்தவர் வாழ்க்கையையும் சீர்குலைக்க வேண்டாம் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

உங்கள் நோக்கம் இனி அதிக மதுபோதையின் தீமை குறித்து வெளிப்படையாக அறிவித்தலாகவே இருக்கட்டும். காரணம் எவரேனும் ஒருவருக்கு தினசரி நான் படும் அவஸ்தைகள் இந்த வலி சென்று சேர வாய்ப்பு உண்டு என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.