தெல்லிப்பளையில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்பு!!

215

bomb

யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை – குரும்பசிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து பெருந்தொகை குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த கிணற்றினை புனரமைப்பு செய்ய கிராமவாசிகள் சென்ற வேளையில் இந்த ஆயுதங்களை கண்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் அப் பகுதிக்குச் சென்ற தெல்லிப்பளை பொலிஸாரால் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் விசேட பிரிவு மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவு ஆகியவை இணைந்து கைப்பற்றப்பட்ட குண்டுகளை செயலிழக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.