உலகில் உள்ள படைப்புகள் ஒவ்வொன்றிலும் ஏராளமான அதிசயங்கள் புதைந்துள்ளது எனக் கூறினால் அது மிகையாது.
ஒரு பெண்ணின் வயிற்றில் உதையமாகும் கருவானது ஆணாக மாறுவதும் பெண்ணாக மாறுவதும் நமது கையில் கிடையாது.
அதேசமயம், இந்த இருபாலினங்களையும் தாண்டி திருநங்கை எனப்படும் மூன்றாம் பாலினமாக மாறுவது என்பதும் இயற்கையாக நடைபெறுவது தான்.
ஆண், பெண் இணைந்து கர்ப்பம் தரித்து குழந்தை பெறுவது இயற்கையாக நடைபெற்று வருகிறது.
அதேபோல், இயற்கையாகவே மூன்றாம் பாலினமாக மாறிய திருநங்கைகள் கர்ப்பம் தரிக்க முடியுமா? மற்றவர்களை போல் ஒரு குழந்தைக்கு பெற்றோராக இருக்க முடியுமா? என்ற கேள்வி பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
இந்த கேள்விக்கு ஆண் மற்றும் பெண்ணாக இருந்து திருநங்கைகளாக மாறிய தம்பதி பதில் அளித்துள்ளனர்.
உலக வரலாற்றில் முதன் முறையாக இந்த திருநங்கை தம்பதி ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.