அனுராதபுரம் விபத்தில் தாய் மற்றும் மகள் பலி!!

285

accident

அனுராதபுரம் கல்கிரியாகம பிரதேசத்தில் இன்று மதியம் நடந்த வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

சபாறி வாகனம் ஒன்று வீதியில் நடந்து சென்று தாய், மகள் மற்றும் ஒரு வயதான குழந்தை மீது மோதிவிட்டு, அருகில் உள்ள மரத்தில் மோதியுள்ளது.

இந்த சம்பவம் கல்கிரியாகம புப்போகம பிரதேசத்தில் உள்ள விளையாட்டு மைதாளம் ஒன்றுக்கு அருகில் நடந்துள்ளது.

சம்பவத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதுடன் ஆண் குழந்தை தூக்கி எறியப்பட்டுள்ளது.

தாயும் மகளும் வாகனத்தில் சிக்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டதுடன் தூக்கி எறியப்பட்ட ஆண் குழந்தை வீதிக்கு அருகில் உள்ள வாய்க்கால் ஒன்றில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.