மாணிக்ககல் கடத்த முயற்சித்த சீன பிரஜை கைது!

665

arrest-1
ஹொங்கோங்கிற்கு மாணிக்க கற்கல் கடத்த முயற்சித்த பெண் ஒருவரை இலங்கை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கடத்தலில் ஈடுப்பட்ட பெண் சீனாவை சேர்ந்தவர் என சுங்க அதிகாரிகள் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறித்த பெண் நேற்று இரவு 11 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.சீன பிரஜையினுடைய பொதிகளில் மாணிக்க கற்கல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.