நயன்தாரா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்து சூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.இந்த படத்தில் எப்படியும் இவருடைய காதலி நயன்தாரா நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால், நயன்தாராவே இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி விலகிவிட்டாராம்.
ஏனெனில், ஏற்கனவே இவர்களை சுற்றி வதந்திகள் தான் உள்ளது, தற்போது இந்த படத்தில் நடித்தால் மீண்டும் பல வதந்திகள் வரும், அதை தவிர்க்கவே இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளாராம்.