புதிய சாதனையை நோக்கி டோனி!!

332

Dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ்.டோனி ஒரு புதிய சாதனையை நிகழ்த்தப் போகிறார் . சம்பியன்ஸ் லீக் கிண்ண போட்டியில் அதிக போட்டிகளுக்கு தலைவராக இருந்தவர் என்ற பெருமைதான் இது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத் தலைமை தாங்கி செப்டம்பர் 22ம் திகதி தனது முதல் போட்டியைச் சந்திக்கும்போது இந்த சாதனையை நிகழ்த்துவார் டோனி.

இந்த வருட சம்பியன்ஸ் லீக் கிண்ண போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. செப்டம்பர் 17ம் திகதி தொடங்கி அக்டோபர் 6ம் திகதி வரை போட்டிகள் நடைபெறும்.

செப்டம்பர் 17ம் திகதி முதல் 20ம் திகதி வரை தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

சென்னையின் முதல் போட்டி ராஞ்சியில் செப்டம்பர் 22ம் திகதி நடைபெறுகிறது. அதில் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை மோதவுள்ளது.

இதுவரை சென்னை அணிக்கு சம்பின்ஸ் லீக் தொடரில் 13 போட்டிகளுக்குத் தலைமை தாங்கியுள்ளார் டோனி. செப்டம்பர் 22ம் திகதி நடைபெறும் போட்டி அவருக்கு தலைவராக 14வது போட்டியாகும். இது ஒரு சாதனையாகும்.

சம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக போட்டிகளுக்கு தலைவராக இருந்தவர் டோனி மட்டுமே. இவருக்கு அடுத்த இடத்தில் 12 போட்டிகளுடன் மேற்கு இந்தியத் தீவுகளின் டேரன் கங்கா அதே 12 போட்டிகளுடன் கம்பீர் ஆகியோர் உள்ளனர்.