பூனை குட்டியின் தலையை துண்டித்த கொடூர சிறுவர்கள்: பதற வைக்கும் காரணம்!

604

maxresdefault

பிரான்சில் மூன்று சிறுவர்கள் பூனை குட்டி தலையை துண்டித்து கொடூரமாக கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அன்டோன்னே-et-Trigonant பகுதியிலே இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.18 வயதுடைய இளைஞன் ஒருவன் தனது பிறந்தநாள் விழாவை கொண்ட Antonne-et-Trigonant பகுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அழைக்கப்படாத மூன்று சிறுவர்கள் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.சிறுவர்களை அடையாளம் கண்ட இளைஞர்கள் மூன்று பேரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். வெளியே வந்த சிறுவர்கள் கோபத்தில் நகராட்சி வாகனங்கள் மற்றும் உபகரணங்களை சேதப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதி வாசி ஒருவர் வீட்டை விட்டு வெளியே வந்து சிறுவர்களை அமைதியாக செல்லும் படி கண்டித்துள்ளார்.இதனையடுத்து, அவரை பழி வாங்க முடிவு செய்த மூவரும், குறித்த நபருக்கு சொந்தமான 4 மாத குட்டி பூனையை பிடித்து தலையை துண்டித்து கொடூரமாக கொன்றுள்ளனர்.பாதிக்கப்பட்ட பூனை குட்டியின் உரிமையாளர் சம்பவம் குறித்து பொலிசில் புகார் அளித்ததையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.