இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிநவீன கார்கள் : புதிய தகவல்கள் அம்பலம்!!

492

rolls-royce

இலங்கையின் ஊடகங்களில் அதிகளவாக பேசப்படும் விடயமாக Rolls Royce மோட்டார் வாகன கொள்வனவு மாறியுள்ளது.

அதிக விலையுடனான Rolls Royce மோட்டார் வாகனம் ஒன்று கடந்த வாரம் வர்த்தகர் ஒருவரினால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வாகனத்தின் இறக்குமதியாக ஒன்பது கோடி ரூபா செலுத்தப்பட்டது.

இதனையடுத்து அதிநவீன வாகனம் தொடர்பில் அனைவரினதும் அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.

இந்த நாட்டு அரசியல்வாதிகள் மூவர் தங்கள் உத்தியோகபூர்வ வாகனமாக Rolls Royce மோட்டார் வாகனத்தை பயன்படுத்தியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் அரசியல்வாதிகளான விலியம் கொபல்லவ, டி.எஸ்.சேனாநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க ஆகியோரே இந்த வாகனத்தை பயன்படுத்தியுள்ளனர்.

இதற்கு மேலதிகமாக பிரபல கட்டடக் கலை நிபுணரான ஜெப்ரி பாவா இந்த Rolls Royce மோட்டார் வாகனத்தை பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும் ஒரு Rolls Royce மோட்டார் வாகனம் தற்போது வரையில் இலங்கையை நோக்கி வந்துக் கொண்டுள்ளதாக சுங்க திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.