50 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்துடன் 5 டெஸ்ட் விளையாடவுள்ள இந்திய அணி!!

335

india

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக அடுத்த ஆண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இது குறித்த பரிந்துரைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் சபை நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்தில் முதன்முறையாக அந்நாட்டு அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.

இரு அணிகளுக்கு இடையே கடைசியாக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இங்கிலாந்தில் 1959ம் ஆண்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

5 டெஸ்ட் போட்டிகளைத் தவிர, இத்தொடரில் 5 ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் இருபது ஓவர் ஆட்டம் உள்ளிட்டவற்றிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இத்தொடர் அடுத்த ஆண்டு ஜூலை 9ம் திகதி தொடங்கி செப்டம்பர் 7ம் திகதி வரை நடைபெற உள்ளது.

இதேவேளை, 2014ம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை சம்மதம் தெரிவித்துள்ளது.

இதனால் நியூஸிலாந்து அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடும். ஒருநாள் தொடர் ஜனவரி 19ம் திகதி தொடங்கி 31ம் திகதி வரை நடைபெறவுள்ளது.

டெஸ்ட் தொடரானது பெப்ரவரி 7ம் திகதி தொடங்கி 18ம் திகதி வரை நடைபெற உள்ளது. இந்திய அணி கடைசியாக, 2009ம் ஆண்டில் நியூஸிலாந்து சுற்றுப்பயணம் செய்து விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.