பெண்கள் ஆட்டோ ஓட்டுனர்களை நாம் நிறைய பேரை பார்க்கலாம். அண்மையில் சென்னை சூளைமேடு, நெல்சன் மாணிக்கம் சாலையில் நமீதா காரில் சென்றிருக்கிறார். அப்போது ஒரு பெண் ஆட்டோ ஓட்டுவதை பார்த்திருக்கிறார்.உடனே நமீதா தன்னுடைய காரை விட்டு இறங்கி அந்த பெண் ஆட்டோ ஓட்டுனரிடம் சகஜமாகி பேசி, பின் அவருடன் ஒரு செல்பி எடுத்திருக்கிறார்.
அந்த பெண் ஆட்டோ ஓட்டுனர் தனலட்சுமி, நமீதாவிடம் என்னுடன் நீங்கள் போட்டோ எடுப்பது நிஜமா என கேட்க, அதற்கு நமீதா நம்ப முடியாதது எதுவும் கிடையாது, நம்பிக்கை தான் முக்கியம். உன் குடும்பத்திற்காக ஆட்டோ ஓட்டும் உனக்கு ஒரு சல்யூட் என கூறியிருக்கிறார்.