பெற்ற மகளின் ஆடையை அவிழ்த்து கடித்துக் குதறிய தந்தை!!

355

child

மும்பையைச் சேர்ந்த11 வயது சிறுமி ஒருவர் தனது ஆடைகளை அவிழ்த்தும், கடித்தும் துன்புறுத்துவதாக தந்தையின் மீது புகார் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

15 வயதாகும் சிறுமியின் தந்தை ஒரு குடிகாரர்.அவருக்கு 45 வயதாகிறது. சமீபத்தில் அவரது வீட்டுக்கு அருகே குடிபோதையில் சிலருடன் தகராறு செய்துள்ளார்.

அப்போது அந்த நபர்கள் அனைவரும் சேர்ந்து சிறுமியின் தந்தையை அடித்துள்ளனர். ஆனால் அவரைக் காப்பாற்ற சிறுமி முயலவில்லையாம்.

இதனால் கோபமடைந்த தந்தை தனது மகள் என்றும் பாராமல் அவரது ஆடையை கழற்றி அசிங்கமாக நடந்துள்ளார். மேலும் மகளின் உடலில் கடிக்கவும் செய்துள்ளார்.

குடிகாரத் தந்தை கடித்ததால் சிறுமியின் உடலில் பல் பதிந்துள்ளதாம். குடிகார தந்தை குறித்து தாயாரிடம் அழுதபடி கூறியுள்ளார் அந்த சிறுமி ஆனால் தாயாரோ போகட்டும் விடு என்று சாதாரணமாக கூறி விட்டாராம்.

இதனைத் தொடர்ந்து மனம் நொந்து போன சிறுமி தனது தந்தை மீது பொலிசில் புகார் கொடுத்துள்ளார். பொலிசார் விசாரணை நடத்தி சிறுமியின் தந்தையைக் கைது செய்துள்ளனர்.

தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து சிறுமி கூறுகையில் வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் எனது தந்தை சிலருடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

நான் உதவிக்கு வருவேன் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவர் எப்போதும் குடித்து விட்டு அக்கம் பக்கத்தினருடன் சண்டை போடுவதால் நான் போகவில்லை.

இதனால் கோபமடைந்தார் அவர் நேராக வீட்டுக்கு வந்து என்னை அடிக்க ஆரம்பித்தார். மேலும் என்னை தரதரவென இழுத்துச் சென்று காலால் மிதித்தார்.

பின்பு எனது ஆடையைக் கழற்றி அசிங்கமாக நடந்து கொண்டார். என்னை வெறித்தனமாக கடிக்கவும் செய்தார். வீட்டில் அப்போது யாரும் இல்லை என்பதால் எனது தந்தையை எதிர்த்துப் போராட பயந்து அமைதியாக இருந்தேன்.

அடுத்த நாள் எனது தாயார் எனது உடலில் ஏற்பட்டிருந்த காயத்தைப் பார்த்து என்னவென்று கேட்டபோது நடந்ததைக் கூறினேன். அதைக் கேட்ட அவர் சரி போகட்டும் விடுஎன்று கூறி விட்டார். ஆனால் எனது தந்தையின் செயலால் கொதிப்படைந்த நான் புகார் கொடுக்கத் துணிந்தேன் என்று சிறுமி தெரிவித்துள்ளார்.