வவுனியா கூமாங்குளத்தில் இன்று (01.10.2016) பிற்பகல் 2.30 மணியளவில் கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் கிராம அபிவிருத்திச் சங்கம், முதியோர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச முதியோர் தின நிகழ்வுகள் கூமாங்குளம் கிராம அலுவலகர் சா.கம்ஜகன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கே. கே.மஸ்தான், சிறப்பு விருந்தினராக சித்திவிநாயகர் வித்தியாலய அதிபர் திரு.பாலச்சந்திரன், எஸ்.கபிலன் வாழ்வின் எழுச்சித்திட்டம் கூமாங்குளம், இ.இராமச்சந்திரன் மாவட்ட முதியோர் சங்கத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இன்றைய நிகழ்வில் 70 வயதிற்கு மேற்பட்ட 5 முதியவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் முதியோர் சங்கத்திலுள்ள 175 உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டனர். இன் நிகழ்வுகளில் அப்பகுதி பொதுமக்கள் அரச. அரச சார்பற்ற நிறுவனங்கள், என பலரும் கலந்து கொண்டனர்.
















































