சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டது இஸ்ரேல், அமெரிக்கா மறுப்பு!!

365

is

சிரியா மீது நேற்று 2 பேலிஸ்டிக் வகை ஏவுகணைகள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் அரசப் படைகள் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதை தொடர்ந்து, அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராக உள்ளது.

ஆனால் ரஷ்யாவோ சிரியா மீது தாக்குதல் நடத்தக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை 10.16 மணியளவில் சிரியாவை நோக்கி வந்த இந்த இரு ஏவுகணைகளும் மத்திய தரைக் கடல் பகுதியில் விழுந்துவிட்டதாகவும் அவை சிரியாவைத் தாக்கவில்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது.

மேலும் இதுகுறித்து ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் சொய்கு விவாதித்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தங்களது நாட்டை இதுவரை ஏவுகணை ஏதும் தாக்கவில்லை என்று சிரியாவும் இந்த விவகாரம் குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்று இஸ்ரேலும் கூறியுள்ளன.

கடந்த வாரம் அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை சிரியாவுக்கு நெருக்கமாக அனுப்பியது. இதை கடுமையாக கண்டித்த ரஷ்யா போட்டிக்கு தனது உளவு பார்க்கும் போர்க் கப்பல்களை சிரியாவுக்கு உதவியாக அனுப்பி வைத்தது.

அதே போல அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலான USS Nimitz கப்பலும் ரெட் சீ பகுதியை நோக்கி சென்று கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திய ஏவுகணை பயிற்சியின்போது இவை ஏவப்பட்டுள்ளன. ஆனால் இது குறித்து இந்த இரு நாடுகளும் எந்த தகவலையும் வெளியிடாமல் ரகசியம் காத்தன.

இந்நிலையில் இந்த ஏவுகணைகள் வீசப்பட்டதை ரஷ்யா கண்டுபிடித்து வெளியுலகுக்கு சொன்னதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இந்த ஏவுகணை பயிற்சி நடத்தியதை இஸ்ரேல் ஒப்புக் கொண்டுவிட்டது.

இதன்மூலம் இந்த இரு நாடுகளின் ஏவுகணைகள் தான் சிரியாவை நோக்கி வந்தன என்பது உறுதியாகியுள்ளது. அமெரிக்கா- இஸ்ரேலின் இந்தச் செயல் அந்தப் பிராந்தியத்தில் ஒரு போருக்குக் காரணமாகிவிடும் என்று சிரியா எச்சரித்துள்ளது.