வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் அணிக்கு 8 பேர் கொண்ட 6 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 17.07.2016 அன்று ஆரம்பமானது.
ஞாற்றுக்கிழமைகளில் தொடர்ந்து நடைபெற்றுவந்த இச் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி இன்று (02.10.2016) மாலை 3.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
இறுதிப்போட்டியில் வெற்றி பெரும் அணிகளுக்கு பெறுமதிமிக்க வெற்றிக் கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.
லயன்ஸ் விளையாட்டுக்கழக உப செயலாளர் சோ.ரஜிதரன் தலைமையில் நடைபெறவுள்ள இவ் இறுதி போட்டியில் பிரதம விருந்தினராக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராசா, ம.தியாகராசா, G.T.லிங்கநாதன், செந்தில்நாதன் மயூரன் ஆகியோரும்,
கெளரவ விருந்தினர்களாக எம்.எஸ்.செல்வராஜா(கிராம சேவகர்-பூந்தோட்டம்), திருமதி நந்தபாலன் (அதிபர்-பூந்தோட்டம் மகா வித்தியாலயம்), த.பரதலிங்கம்(தலைவர்- நரசிங்கர் ஆலயம் பூந்தோட்டம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இன் நிகழ்வின் வரவேற்புரையை லிங்கநாதன் சிவச்செலவன்(பொருளாளர் லயன்ஸ் விளையாட்டுக்கழகம்) நிகழ்த்தவுள்ளதுடன், ஆசியுரையை சிவஸ்ரீ உமாசுதக் குருக்கள்(பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம்) நிகழ்த்தவுள்ளார்.
இன் நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.