வவுனியாவில் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது!!

438

arrest

வவுனியா கெஹலிய ரணவிரு கிராமத்தில் வாழும் சிங்கள மக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

தமிழர்களுக்கு சொந்தமான இடத்தில் சிங்களவர்கள் இருக்க கூடாதென இனந்தெரியாத குழுவினரால் பலமுறை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

தலைமறைவாக இருந்த குறித்த நபரையும் அவருடன் இருந்த மற்றுமொரு நபரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்களை இன்று வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்குவெளி பிரதேசத்தை சேர்ந்த சின்னவன் என அழைக்கப்படும் நபரும் அவருடைய சகாக்களும் இணைந்தே தம்மை வெளியேற கோரியதாக அப்பகுதி சிங்கள மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.