வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று(02.10.2016) காலை 10 மணியளவில் வவுனியாவிற்கான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்ணனியின் மாவட்ட காரியாலய நிரந்தர கட்டிடத்தினை உத்தியோக பூர்வமாக கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனால் திறந்து வைக்கப்பட்டது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்ணனி கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட கட்சியின் அமைப்பாளர்கள், வவுனியா மாவட்ட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என நூற்றுக்கும்மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.