வவுனியாவிலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்க வன்னி மாவட்ட பிராந்திய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனினால் வீதி விபத்துக்களை தடுப்பது மற்றும் வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கான காரணங்கள் போன்றவை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு கடந்த 29.09.2016 இரவு 7 மணியளிவில் வவுனியா சிந்தாமணிப்பிளையார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
வீதிப் போக்குவரத்து பொறுப்பதிகாரி, மன்னார். முல்லைத்தீவு, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், வீதி போக்குவரத்துப் பொலிசார் மற்றும் வவுனியா முச்சக்கரவண்டி சாரதிகள் என பலரும் கலந்து கொண்டதுடன் விபத்து தொடர்பான விழிப்புணர்வு காணொளியும் காண்பிக்கப்பட்டது.