வட்டவளையில் கொள்ளையிட்டவர்களை ஒரு கி.மீ. தூரம் சென்று காட்டிக் கொடுத்த பொலிஸ் மோப்ப நாய்!!

902

dog

வட்­ட­வளை பிர­தே­சத்தில் ஆசி­ரி யர் ஒரு­வரின் வீட்டில் கொள்­ளை­ய­டித்­தார்கள் எனக் கூற­பப்டும் சந்தேக நபர்­களை ஜெனி ஜோர்மன் செப்­பட்டா என்ற மோப்ப நாயின் உத­வி­யுடன் 24 மணித்தியாலத்துக்குள் கைது செய்­துள்­ள­தாக ஹட்டன் பொலிஸார் தெரி­வித்­தனர்.

ஹட்டன் பொலிஸ் நிலை­யத்­திற்கு கடந்த சில நாட்­க­ளுக்கு முன் வழங்­கப்­பட்ட மோப்ப நாயின் முதல் கட்ட நட­வ­டிக்­கையின் போதே குற்­ற­வா­ளி­களை துரி­த­மாக கண்­டு­பி­டிக்க முடிந்­துள்­ள­தாக ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி தெரி­வித்தார்.

கடந்த முதலாம் திகதி இரவு வட்­ட­வளை பிர­தேச பாட­சாலை பணிப்­பு­ரியும் ஆசி­ரியர் குடும்­பத்­தி­னரால் புதி­தாக நில்­மா­ணிக்­கப்­படும் புதிய வீட்­டுக்குள் நுழைந்த நபர்கள் வீட்டின் 3லட்­சத்து ஐம்­ப­தா­யிரம் ரூபாய் பெறு­ம­தி­யான தங்க நகை­களும் 1 லட்சம் ரூபா பணத்­தையும் கொள்­ளை­ய­டித்துச் சென்றுள்ளனர்.  இதன் போது ஆசி­ரி­யரின் தயார் மட்டும் வீட்டில் இருந்­துள்ளார்.

இந்தச் சம்­பவம் தொடர்பில் வட்­ட­வளை பொலிஸ் நிலை­யத்தில் உரி­மை­யா­ளர்­க­ளினால் முறைப்­பாடு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து வட்­ட­வளை பொலி­ஸா­ரினால் ஹட்டன் பொலிஸ் நிலை­யத்தின் மோப்ப நாய் பிரிவின் ஜெனி ஜோர்மன் செப்­பட்ட இன மோப்ப நாயின் உத­வியை நாடப்­பட்டு வீட்­டினை சோதனையிட்ட பின்னர் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஒடி சென்று குறித்த குற்­ற­வா­ளி­களை இனம் காட்டி­யுள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட இருவர் குற்றங்­களை ஒப்புக் கொண்­டுள்­ள­துடன் பணத்­தொ­கை­யையும் மீட்டுள்ளனர்.

கணாமல் போன தங்கம் தொடர்பில் வட்டவளை மற்றும் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.