சுமார் 1,539 கார்களை கொண்ட பாரிய கப்பல் கொழும்பு துறை முகத்தை வந்தடைந்துள்ளது. இந்தக் கப்பல் இந்தியாவின் இனோரா துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் செயற்பாட்டு பணிப்பாளர் ஜயந்த பெரேரா தெரிவித் துள்ளார்.
‘ஸ்பிரின்ங் ஸ்கை” (SPRING SKY) எனும் பெயரைக் கொண்ட இந்தக் கப்பல், அதிகளவிலான வாகனங்களைக் கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒன்றாகும்.
ஹொங்கொங்கில் பதிவுசெய்யப்பட்ட இக் கப்பலின் நீளம் 165 மீற்றர் களாகும். இவ் வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த முதலாவது விசாலமான கப்பல் இது என கருதப்படுகிறது.
இலங்கை துறைமுக அதிகார சபையின் ECT என்ற பகுதியில் இந்தக் கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை துறைமுக அதிகார சபையின் செயற்பாட்டு பணிப்பாளர் ஜயந்த பெரேரா தெரிவித் துள்ளார்.
குறித்த கப்பலில் காணப்பட்ட வாகனங்களை இறக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








