இலங்கை கடற் பரப்பில் இளம் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற இந்திய பிரஜை!!

483

beach

கடற்பரப்பில் நீராடிக் கொண்டிருந்த இளம் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளது. அம்பலாங்கொட கடற்பரப்பிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இந்திய நாட்டு பிரஜை என கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த நபர் இளம் பெண் மேலும் சிலருடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையில்,குறித்த இளம் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளார்.

இந்நிலையில், இளம் பெண் கூச்சலிட்டதனை தொடர்ந்து, அங்கு இருந்த மக்களினால் சந்தேக நபர் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.