நீடிக்கும் வறட்சியான காலநிலை : 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!!

1472

varatchi

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையால் இதுவரை 208,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 7 மாவட்டங்களைச் சேர்ந்த 51,561 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 25ஆம் திகதி அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கைக்கமைய 2 மாவட்டங்களைச் சேர்ந்த 34,809 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்த அதேவேளை, 7 நாட்களுக்குள் அதன் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வறட்சியினால் திருகோணமலையில் 12,677 பேர், மட்டக்களப்பில் 57,001பேரும், பொலன்னறுவையில் 110,352 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 8,422 பேரும், வவுனியாவில் 8,661 பேரும், இரத்தினபுரியில் 10,994 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.