வவுனியாவில் வடமகாண கல்விக் கண்காட்சி கடந்த 02.10.2016 மற்றும் 03.10.2016 ஆகிய இரண்டு தினங்களாக இடம்பெற்றது.
நேற்று (03.10.2016) வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசாவினால் மாணவர்களின் ஆக்கங்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண பாடசாலை மாணவர்களின் ஆக்கங்னகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.
இலங்கை நிலைபொது சக்தி அதிகாரசபை, மின்சக்தி மற்றும் மீள்சக்தி அமைச்சு, கல்வி அமைச்சு, கல்வி அமைச்சின் விஞ்ஞானப் பிரிவு, மாகாணக்கல்வித் திணைக்களம் ஆகிய இணைந்து இக் கண்காட்சியை ஒழுங்குசெய்திருந்தன.
இன் நிகழ்வில் நாடகம், விவாதம், வீதிநாடாகம, குறும்படம், ஆகிய துறைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.












































