வவுனியாவில் நெளுக்குளம் பாடசாலைக்கு முன்பாக இன்று (04.10.2016) காலை 8.30 மணியளவில் ஒன்றுகூடிய பழைய மாணவர்களினால் முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டமொன்று பொலிசாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய மைதானத்திற்குள் அதிபர் விடுதி கட்டப்படுவதனால் மைதானத்தில் விளையாடுவதற்கு இடவசதி இல்லாமல் போய்விடும் என்பதனால் இன்று நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவிருந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிசாரினால் இவ் ஆர்ப்பாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டு தற்போது பழைய மாணவர்கள, ஆசிரியர்கள், அதிபர் ஆகியோரை அழைத்து கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலின் போது இவ் இடத்தில் அதிபர் விடுதி கட்டப்படும் என்பதனால் தற்போது மாணவர்கள் வீதியிறங்கி போராட தயாரகவுள்ளதாக சம்பவ இடத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.










