வவுனியாவில் பொலிசாரினால் 102 கிலோ கஞ்சா மீட்பு!!

509

 
வவுனியாவில் இன்று (04.10.2016) அதிகாலை 3 மணியளவில் வீதி சோதனையின் போது 102 கிலோ பெறுமதியான கஞ்சாவினை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..

தமது வழமையான சோதனையின் போது வவுனியா மன்னார் வீதி சந்தியில் வான் ஒன்றுக்குள் ஒளித்துவைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலிருந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்ட கஞ்சாவினை வவுனியா பொலிசார் இன்று அதிகாலை கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வன்னி பிரதிப்பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் வவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி நெறிப்படுத்தலில் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இதன் பெறுமதி ஒன்றரைக்கோடிக்கு மேல் இருக்கும் என்றும் வான் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

dsc_0243dsc_0244dsc_0246dsc_0247dsc_0248dsc_0250dsc_0251dsc_0252dsc_0253dsc_0254dsc_0259dsc_02601 dsc_0262 dsc_0263 dsc_0264 dsc_0266 dsc_0267 dsc_0269 dsc_0272 dsc_0273