வவுனியா குருமன்காட்டில் இன்று (05.10.2016) காலை 7.30 மணியளவில் இரு தனியார் பேரூந்துகள் விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
மன்னார் வீதியுடாக வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து பயணிகள் தரிப்பிடத்தில் தரித்து நின்ற சமயத்தில் அதே வீதியுடாக பயணித்த தனியார் பேரூந்து தரிந்து நின்ற தனியார் பேரூந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தினால் இரு சாரதிகளுக்குமிடையில் சலசலப்பு ஏற்ப்பட்டது. பின்னர் இருவரும் சமாதானமடைந்து சென்றுள்ளனர். இவ் விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்ப்படவில்லை.