கட்டுநாயக்க விமான நிலையத்தின் 200 விமானப் போக்குவரத்துக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக, இலங்கை விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் 47 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் இலக்க நேரிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் மாதம் வரையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை பராமரிப்புப் பணிகள் இடம்பெறவுள்ளமையே இதற்குக் காரணமாகும்.






