வவுனியாவில் இன்று (05.10.2016) காலை இடம்பெற்ற விபத்தில் ரயிலுடன் மோதி படுகாயமடைந்த இளைஞர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்..
இன்று காலை கல்குனாமடு பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் அஜித்குமார என்ற 27 வயதுடைய இளைஞன் இன்று காலை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புகையிரதத்துடன் மோதி விபத்துச் சம்பவம் இடம்பெற்றதா அல்லது தற்கொலை செய்து கொள்ள முயன்றாரா என்பது குறித்து தெரியவரவில்லை.
வவுனியா பொது வைத்தியசாலையில் அப் பிரதேச மக்களினால் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஆபத்தான கட்டத்திலுள்ளதால் மேலதிக சிகிச்சைக்காக இன்று பிற்பகல் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விசாரணையினை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






