பறந்துகொண்டிருந்த விமானமொன்றில் பறவையொன்று மோதியதால், பறவையின் உடல் விமானத்துக்குள் புகுந்த நிலையில் அவ் விமானம் தரையிறங்கிய சம்பவம் வெனிசூலாவில் இடம்பெற்றுள்ளது.
செஸ்னா 650 ரகத்தைச் சேர்ந்த இவ் விமானம் நேற்று முன்தினம் பறந்து கொண்டிருந்தபோது அதன் மீது பறவையொன்று மோதியது. இம் மோதலினால் அப் பறவை இறந்த நிலையில் அதன் உடலின் பகுதி விமானத்துக்குள் புகுந்து கொண் டது.
எனினும், வெனிசூலா சைமன் பொலிவர் விமான நிலையத்தில் அவ் விமானத்தை விமானி தரையிறக்கினார். விமானத்துக்கு இதனால் சேதம் ஏற்பட்ட போதிலும் இச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி பறவை எந்த இனத்தைச் சேர்ந்த என்பது உடனடியாக தெரிய வரவில்லை. எனினும், தென் அமெரிக்காவில் பரவலாகக் காணப்படும் கழுகுகளில் ஒன்றாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
விமானங்களின் மீது பறவைகள் மோதுவது புதிய விடயமல்ல. 2013 ஆம் ஆண்டில் விமானத்தின் இயந்திரங்களில் பறவைகள் மோதிய 1,535 சம்பவங்கள் பதிவாகியதாக விமானப் போக்குவரத்து அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.