சிரிய கொள்ளையர்களிடம் இருந்து தப்பித்த ஜேர்மனியர்!!

349

Syrian-Rebels

சிரியா கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட ஜேர்மன் தொண்டு நிறுவன தொழிலாளி ஒருவர் 111 நாட்களுக்கு பின்பு தப்பித்துள்ளார்.

ஜேர்மனைச் சேர்ந்த பொறியாளர் சியாத் நூரி. 72 வயதான இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னால் சிரியா கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டார்.

மேலும் இவருடன் சேர்த்து இரண்டு நபர்களும் கடத்தப்பட்டு ஒரு மலைப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 111 நாட்களாக அடைத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் தற்போது அந்த கொள்ளை கும்பலிடம் இருந்து தப்பித்துள்ளனர்.

இது குறித்து நூரி கூறுகையில், எங்களை கடத்தி வைத்து பணம் கேட்டனர், மேலும் எங்களுக்கு முன்னதாக கடத்தப்பட்டவர்கள் கடந்த யூலை மாதம் தப்பித்துவிட்டார்கள்.

நாங்கள் கொள்ளையர்கள் தூங்கிய போது தப்பித்து வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.