வவுனியா கலாச்சார மண்டபத்தில் இன்று (07.10.2016) காலை 9.30 மணியளவில் தேசிய வாசிப்பு மாதம் 2016 நிகழ்வுகள் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடடாளுமன்ற உறுப்பினர் கே.கே. மஸ்தான், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராசா, ம.தியாகராசா, செ.மயூரன், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அசங்க காஞ்சன குமார, பிரதேச சபை தலைவர்கள், சர்வமதத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் அரச ஊழியர்கள் திணைக்களத் தலைவர்கள் கலந்து கொண்டதுடன், சிறந்த நூலகங்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.







































