மகனின் தாக்குதலில் தந்தை பலி!!

535

attack

மொனராகல-தம்பலகல பிரதேசத்தில் மகன் ஒருவரின் தாக்குதலில் தந்தை பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (07) மொனராகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மேலும், நில பிரச்சினையால் 36 வயதான மகனது தாக்குதலில் 67 வயதுடைய தந்தை பலியாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

இதேவேளை, சந்தேகநபரை பொலிஸார் கைதுசெய்து இன்றைய தினம் மொனராகல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.