ஆர்ஜென்டினா நாட்டில் நிறை மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஓடும் பேருந்தில் குழந்தை பிறந்துள்ளது.
அர்ஜென்டினாவின் சாண்டிகோ நகரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் பேருந்தில் பயணம் செய்துள்ளார்.
அப்போது திடீரென அவருக்கு பிரசவவலி ஏற்பட்டது, இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தியதுடன், உதவிக்கு அருகிலிருந்த பொலிசாரையும் அழைத்துள்ளார்.
பின்னர் இவர்கள் உதவியுடன் அந்த இளம் பெண்ணுக்கு பேருந்துலேயே அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதை வீடியோவாக பதிவு செய்துள்ள அந்த ஓட்டுனர் அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
மகிழ்ச்சியுடன் தன் குழந்தையை கையில் ஏந்திக் கொண்டு அந்த பெண் கூறுகையில், என் பிரசவம் நல்லபடியாக நடந்தது, எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி அவர் கூறியுள்ளார். தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.