சீனாவில் உள்ள குவாங்கோ நகரில் வானில் தோன்றிய (பறக்கும் தட்டு ) மர்மப்பொருளால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.
திடீரென வானில் அந்த மர்மப்பொருள் தோன்றியதால் வாகனத்தில் சென்றவர்கள் வியப்படைந்ததுடன், குறித்த இடத்தில் நின்று மர்மப்பொருளை புகைப்படம் மற்றும் கானொளிகளையும் எடுத்தனர்.
மேலும் குறித்த மர்மப்பொருள் சுழலும் வேளையில் பல கரும் பொருட்கள் தோன்றுவதாக பொது மக்கள் கூறியுள்ளனர்.
இதன்காரணமாக அப்பகுதி முழுவதும் பல மணி நேரத்திற்கு கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.