குவைத்தில் மதுபானம் தயாரிப்பு மற்றும் கஞ்சா விற்பனை : ஐந்து இலங்கையர்கள் கைது!!

319

kuwait

குவைத் நாட்டில் சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்த மூன்று இலங்கையர்களும் ஒரு இந்திய பிரஜையும் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குவைத், கொய்ஃபான் என்ற பிரதேசத்தில் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டில் இவர்கள் மதுபானம் தயாரித்து வந்துள்ளனர்.

குவைத் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அங்கு சென்ற பொலிஸார், சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் 152 பெரல்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் தேடிய போது, இவர்கள் குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து தெரியவந்துள்ளது.

இவர்களில் ஒருவர் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் தேடப்பட்டு வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

அதேவேளை குவைத் சபாஹியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இரண்டு இலங்கையர்கள் கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் வேறு ஒருவருக்கு கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்த போது பிடிபட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 1.5 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.