மஹேலவை கட்டித்தழுவிய காரணத்தை விளக்குகிறார் தீவிர கிரிக்கெட் ரசிகை!!

557

m2-1

புற்றுநோய் வைத்தியசாலைக்கு நிதிதிரட்டும் முகமாக வடமராட்சியில் இடம்பெற்ற நடைபவனியின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மஹேல ஜெயவர்த்தனவை கட்டித்தழுவி பரபரப்பை கிளப்பிய பெண், மகிழ்ச்சியை அடக்க முடியாமல் அப்படி செய்து விட்டதாக விளக்கமளித்துள்ளார்.

அத்துடன் ஊடகங்கள் இதனை தவறான கண்ணோட்டத்துடன் அணுகுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

எங்கள் குடும்பத்தில் அனைவரும் கிரிக்கெட் ரசிகர்கள். அதிலும் இலங்கை ரசிகர்கள். சங்ககார, மஹேல என்றால் அனைவருக்கும் உயிர். கடந்த தடவை சங்கக்கார நடைபவனி வந்தபோது ஆயிரம் ரூபா கொடுத்தேன்.

மஹேலவை நேரில் பார்த்ததில்லை. தொலைக்காட்சியில்தான் பார்த்தேன். வீதியில் கைகுலுக்கிக் கொண்டு வந்தார். அவரை பார்த்த போது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போது எதிர்பாராத விதமாக அந்த சம்பவம் நடந்துவிட்டது.

நான் விளையாட்டை நேசிக்கும் ஒருவர். அதனால் அப்படி செய்தேன். ஊடகங்கள் பெரிதுபடுத்தி விட்டன. தவறான கண்ணோட்டத்துடன் அணுகுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறியுள்ளார்.

m1-1m3