உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லா மருத்துமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதல்வருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.
சுவாச சிகிச்சையை மருத்துவர்கள் கவனமாக கண்காணித்து வருகின்றனர். நுரையீரல் அடைப்பை போக்கும் சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஊட்டச்சத்தும், பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






