பிரித்தானியக் கடற்கரையொன்றில் அழுகிய நிலையில் கரையொதுங்கிய உடலொன்று, கடற்கன்னியின் உடல் என சிலர் கூறுகின்றனர்.
இடுப்புக்கு மேல் மனித உடலையும் இடுப்புக்கு கீழ் மீன் போன்ற தோற்றத்தையும் கொண்ட ‘கடற்கன்னிகள்’ குறித்து புராதன கதைகள் பல நாடுகளின் இலக்கியங்களில் உள்ளன.
பல திரைப்படங்களிலும் கடற்கன்னிப் பாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், உண்மையில் கடற்கன்னி என்பது ஒரு கற்பனை உயிரினமே எனக் கருதப்படுகிறது. இதுவரை கடற்கன்னி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஆனால், இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியிலுள்ள நோர்போல்க் கவுன்ரியின் கிரேட் யார்மௌத் கடற்கரையில் அண்மையில் ஒரு விசித்திர உயிரின எச்சம் கரையொதுங்கியுள்ளது.
சேதமடைந்த மனித தலை போன்ற தோற்றத்தையும் மீனின் வால் போன்ற அமைப்பையும் இது கொண்டுள்ளது.
இது கடற்கன்னியின் உடல்தான் என சிலர் கூறுகின்றனர். ஆனால், இது இறந்த ‘சீல்’ (கடல் நாய்) விலங்கொன்றின் உடல் என வேறு சிலர் கூறுகின்றனர்.