எப்பாவல, ரத்தொட்ட பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எப்பாவல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
ரத்தொட்ட, இஹலஹல்மில்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சம்பவம் இடம்பெற்றுள்ள இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன், எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






