வவுனியாவில் நேற்று இரவு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா, அலகல்ல, அலுத்கம பிரதேசத்தின் காட்டுப் பகுதியிலேயே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து இன்று காலை அங்கு சென்ற பிரதேச மக்களுக்கு இரண்டு RPG குண்டுகளை காண முடிந்துள்ளன.
இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. குறித்த இடத்திற்கு இரண்டைபெரியகுளம் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை வெடிகுண்டு அகற்றல் பிரிவினர் சென்றதோடு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு RPG குண்டுகள் கிடைத்த இடத்தில் தீப்பற்றி எரிந்துள்ளமை காணமுடிந்துள்ளது. மற்றொரு RPG குண்டு வெடித்தமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.